Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய பொறுப்பு!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:49 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் வெளிநாட்டு நிதி உதவியோடு விரைவில் இந்த பணி தொடங்கும் என்றும் கூறப்பட்டது 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அவர்களுக்கு இது குறித்த முக்கிய பதவி ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான ரவீந்திரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களில் எம்பி சு வெங்கடேசன் அவர்கள் விலகிய நிலையில் தற்போது ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து விரைவில் இதன் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments