Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

Siva
புதன், 13 நவம்பர் 2024 (18:48 IST)
என் மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை, தப்புதான். ஆனால் அதே நேரத்தில், மருத்துவர் பாலாஜி என்னை ஆங்கிலத்தில் திட்டுவார். எனக்கு என்ன நோய் என்பதையே அவர் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு சிகிச்சை அளிப்பதில் அவர் தாமதப்படுத்தினார். அதனால் தான் என் மகன் ஆத்திரப்பட்டு கத்தியால் குத்திவிட்டார் என்று கைதான விக்னேஷின் தாயார் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது, "நான் ஏதாவது சந்தேகம் கேட்டால், 'இங்கு யார் மருத்துவர்?' என மரியாதை குறைவாக மருத்துவர் பாலாஜி பேசுவார். தனியார் மருத்துவமனையில் என்னை காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டதால்தான் என் மகன் மன உளைச்சலால் இந்த மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், இங்கே உள்ள மருத்துவர் 25 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எனக்கு என்ன நோய் என்பதே கண்டுபிடிக்கவில்லை," என்றும் அவர் கூறினார்.

எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்னை முறையாக கவனிக்கவில்லை. என் மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில், மருத்துவர் பாலாஜி மீது எனக்கும் கடும் கோபம் உள்ளது; அவர் என்னை ஆங்கிலத்தில் திட்டுவார்," என்று கூறியுள்ளார்.

அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments