Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் .. பழி தீர்த்த மாமனார்... கதறல் சம்பவம்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (14:00 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் வசித்துவந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த  ஒரு வருடத்துக்கு முன்பு கவுண்டம்பாளையம் சக்திநகரைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி பிரசவத்துக்காக சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் போதிய அளவு ரத்தம் இல்லாததால் சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.இப்படியிருக்கு ராஜேந்திரன் சரிசர வேலைக்குச் செல்லாமல்  இருந்துள்ளார்.
 
இந்நிலையில் மருத்துவமனையில்  இருந்து திரும்பிய ஷாலினி, தன் சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார்.  அப்போது தன் வீட்டுக்கு வரும் படி, ராஜேந்திரன்  அவரை அழைத்துள்ளார். அதற்கு வேலைக்குச் செல்லாதவனுடன் என் மகளை அனுப்ப முடியாது என ஷாலினியின் தாய் மீனா கூறியுள்ளார்.
 
இதில் ஆத்த்திரமடைந்த ராஜேந்திரன் மாமியார் என்று கூட பார்க்காமல், அவரது கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் இதுகுறித்து தன் கணவர் தங்கமணியிடம் கூறியுள்ளார்.
 
அதில் ஆத்திரமடைந்த தங்கமணி, ராஜேந்திரனிடன் விசாரித்துள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையாஜ்கி உள்ளது. இதில் ராஜேந்திரனின் முதுகிலும் , வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார் தங்கமணி. பின்னர், ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் தங்கமணியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments