Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன்”.. இஸ்ரோவிலிருந்து வெளியான தகவல்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:38 IST)
திட்டமிட்டபடி நிலவில் சந்திரயான் 2 தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி செலுத்தப்பட்ட விண்கலமான சந்திரயான் 2, 22 நாட்கள் புவியை சுற்றிவந்த நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதையை செவ்வாய்க்கிழமை சென்றடைய உள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படும்.

இந்நிலையில், இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், “ நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன். இந்த பிரம்மாண்டமான பயணத்தை மேற்கொண்டிருக்கும் நான், சரியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவேன்” என சந்திரயான் விண்கலம் கூறுவது போலவே பதிவு செய்துள்ளது.

நிலவின் பரப்பில் சந்திரயான் 2 தரையிறங்குவதை செப்டம்பர் 7-இல் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடியும் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments