Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

Prasanth K
ஞாயிறு, 8 ஜூன் 2025 (09:20 IST)

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - விழுப்புரம் மற்றும் சென்னை புறநகர் ரயில்கள் பகுதி நேரமாகவும், முழு அளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. 

 

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ரயில் பகுதி நேர ரத்து விவரங்கள்:

 

கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே நாளை மற்றும் 12ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.20 முதல் மாலை 3.20 வரை மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

 

ரயில்கள் முழு ரத்து விவரங்கள்:

 

செண்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மற்றும் 11.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து

செண்ட்ரல் - சூலூர்பேட்டை செல்லும் 10.15, 12.10, 01.05 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி செல்லும் 9.40, 12.40 மின்சார ரயில்கள் ரத்து

செண்ட்ரல் - ஆவடி செல்லும் இரவு 11.40 மணி மின்சார ரயில் ரத்து

கும்மிடிப்பூண்டி - செண்ட்ரல் செல்லும் 1.00, 2.30, 3.15 மின்சார ரயில்கள் ரத்து

சூலூர் பேட்டை - செண்ட்ரல் செல்லும் 1.15, 3.10 இரவு 9 மணி மின்சார ரயில்கள் ரத்து

சூலூர்பேட்டை - நெல்லூர் மாலை 3.50 மின்சார ரயிலும், மறுமார்க்கமாக நெல்லூர் - சூலூர்பேட்ட்டை செல்லும் மாலை 6.45 மணி மின்சார ரயிலும் ரத்து

 

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

 

செங்கல்பட்டு - கும்மிடிபூண்டி இடையே 9.55க்கு செல்லும் மின்சார ரயில் கடற்கரை - கும்மிடிபூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கடற்கரையில் நிறுத்தப்படும்.

 

கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3 மணி மின்சார ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு கடற்கரையிலிருந்து புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும்

 

சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்:

 

ரயில்கள் ரத்து செய்யப்படும் மேற்படி 2 நாட்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

செண்ட்ரல் - பொன்னேரி - காலை 10.30

செண்ட்ரல் - மீஞ்சூர் - காலை 11.35

கடற்கரை - பொன்னேரி - மதியம் 12.30

பொன்னேரி - செண்ட்ரல் - மதியம் 1.18

மீஞ்சூர் - செண்ட்ரல் - மதியம் 2.56

பொன்னேரி - செண்ட்ரல் - மாலை 3.33

 

தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் ரத்து விவரம்:

 

ஒலகூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடக்கும் நிலையில் தாம்பரம் - விழுப்புரம் இடையே செயல்படும் பயணிகள் ரயில் இன்று மேல்மருவத்தூர் மட்டுமே இயக்கப்பட உள்ளது. விழுப்புரத்திலிருந்து 9.45க்கு புறப்படும் ரயில் பகுதியாக மேல்மருவத்தூரில் நிறுத்தப்பட்டு, மறுமார்க்கமாக பிற்பகல் 1.40க்கு சென்னை புறப்படும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments