Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை தேடி மருத்துவம் - 1,28,361 பேருக்கு சிகிச்சை

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

 
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் கூறியதாவது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள 58,341 பேருக்கு நேரில் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ள 36,775 பேருக்கு வீட்டில் சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய இரு நோய் பாதிப்புகளும் உள்ள 25,787 பேருக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3,772 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments