Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி - தமிழகம் சாதனை

Advertiesment
இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி - தமிழகம் சாதனை
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (15:02 IST)
இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

 
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஏறத்தாழ பல கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
பேரிடர் காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக சுகாதாரத் துறையில் தமிழகம் திகழ்கிறது. மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே 25,617 பேர்  பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. 
 
மூன்றாவது அலை வந்தால் அதனை தடுக்க அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா முற்றுப்புள்ளியா? ஆர் பி உதயகுமார் கேள்வி!