Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ஆட்சி பயமாக இருக்கிறது...பிரபல இயக்குநரால் பரபரப்பு

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (20:29 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் என்பவர் கடந்த ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார் இயக்குநர் பா .ரஞ்சித். பின்னர் ஓசூர் அடுத்த மத்திகிரியில் சட்ட ஆலோசனை மையம் மற்றும் பாடசாலையில் உள்ள திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழக அரசு அறிவித்த மாதிரி நந்தீஸ் வீட்டுக்கு பட்டா வழங்கியுள்ளனர்.  அதேபோல் நந்தீஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்குவதாக கூறிய அரசு அதை விரைவில் வழங்க வேண்டும்.
 
தமிழகத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தாலும் கூட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது பற்றி முற்போக்கு அமைப்புகள் விவாதிக்க வேண்டும்.
 
மேலும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments