Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிவு ஒளியூட்டி, அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! – முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்து!

அறிவு ஒளியூட்டி, அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! – முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்து!
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:27 IST)
இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், சிறந்த ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் “அறிவு ஒளியூட்டி, அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! மனிதர்களை மதிவாணர்களாகவும், மாமேதைகளாகவும் உருவாக்குவதும், மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான்.

காலத்தால் அழிக்க முடியாத அத்தைகைய கல்வி செல்வத்தை மாணவர் செல்வங்களுக்கு அள்ளி தரும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சர்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து பல பகுதிகலில் கத்துக்குத்து; 10 பேர் பலி! – கனடாவை அதிர வைத்த சம்பவம்!