Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை பார்க்க சென்ற முதல்வருக்கு ஷாக்..! – உடனடியாக எடுத்த ஆக்‌ஷன்!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (10:50 IST)
ராணிப்பேட்டையில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் விடுதிக்கு சென்றார்.

ராணிப்பேட்டையில் மக்களுக்கு உதவும் வகையிலான ரூ.250 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக ராணிப்பேட்டை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் இருந்த அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் நல மையத்தின் ஆதரவற்ற குழந்தைகள் விடுதிக்கு திடீட் விசிட் அடித்தார்.

அங்கு குழந்தைகளுக்கு தேவையான வசதிகள், சுகாதாரம் சரியாக பேணப்படுகிறதா என்பதை ஆராய்ந்தார். அவர் சென்றபோது விடுதி கண்காணிப்பாளர் பணியில் இல்லாத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு கிளம்பி சென்றுள்ளாராம். முதல்வரின் இந்த திடீர் விசிட் மற்றும் நடவடிக்கை ராணிப்பேட்டை மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments