Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார்: பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (12:56 IST)
பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்
தமிழகத்தில் பெரியார் சிலைகளை அவ்வப்போது மர்ம நபர்கள் உடைத்தும் அவமதிப்பும் வரும் நிலையில் இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனைக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! அதனால்தான் அவர் பெரியார் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
 
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments