Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேசவும், எழுதவும் நான் கலைஞர் அல்ல... ஆனால் - ஸ்டாலின் நெகிழ்ச்சி!

பேசவும், எழுதவும் நான் கலைஞர் அல்ல... ஆனால் - ஸ்டாலின் நெகிழ்ச்சி!
, சனி, 7 மே 2022 (11:04 IST)
திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். 
 
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. கழகத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். 
 
இந்நிலையில் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். துளி போன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் சாதனைகளை செய்துள்ளோம் என பேசினார். தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் இந்த அவையில் பேசுகிறேன். நான் கலைஞர் அல்ல, அவரைப் போல பேச தெரியாது, எழுத தெரியாது, ஆனால் அவரைப் போல உழைக்க முயன்றேன் என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வராய் ஓராண்டு... கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம்!