Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதத்தில் நாற்காலியை விட்டு இறங்கப் போகும் எடப்பாடி: ஸ்டாலின் ஆருடம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (11:28 IST)
இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி என ஸ்டாலின் பேச்சு. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. 
 
இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமையும் போது, ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பேசியுள்ளார். அதோடு, இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் இன்னும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாங்கள் பாடுபடுவோம் என பேசி வருகிறார். 
 
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் ஆள்கிறது. ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், எங்கும் தப்ப முடியாது. திமுக ஆட்சி அமையும் போது இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments