Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மாதத்தில் நாற்காலியை விட்டு இறங்கப் போகும் எடப்பாடி: ஸ்டாலின் ஆருடம்!

6 மாதத்தில் நாற்காலியை விட்டு இறங்கப் போகும் எடப்பாடி: ஸ்டாலின் ஆருடம்!
, திங்கள், 12 அக்டோபர் 2020 (11:28 IST)
இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி என ஸ்டாலின் பேச்சு. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. 
 
இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமையும் போது, ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பேசியுள்ளார். அதோடு, இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் இன்னும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாங்கள் பாடுபடுவோம் என பேசி வருகிறார். 
 
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தில் ஆள்கிறது. ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், எங்கும் தப்ப முடியாது. திமுக ஆட்சி அமையும் போது இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி - பின்னணி என்ன?