Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் பண்பாட்டை தேடி இந்தியாவெங்கும் ஆய்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:58 IST)
தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சபுரம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் பல இடங்கள் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “கீழடி அகழ்வாய்வு உலகத்தையே தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியா முழுவதும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வெங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments