Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் பண்பாட்டை தேடி இந்தியாவெங்கும் ஆய்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:58 IST)
தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியா முழுவதும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சபுரம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் பல இடங்கள் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “கீழடி அகழ்வாய்வு உலகத்தையே தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியா முழுவதும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வெங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரையுலகில் 50 ஆண்டுகள்.. ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

மோடி தொகுதி வாரணாசியிலும் வாக்காளர் மோசடியா? ஒரே தந்தைக்கு 50 மகன்கள்?

இன்னொரு அதிமுக விக்கெட் காலி.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி..!

வியட்நாம் விவசாயிகளை விரட்டியடித்த ட்ரம்ப்! கோல்ஃப் க்ரவுண்ட் கட்ட திட்டம்!

மீண்டும் ஓட்டுனர் உரிமை வழங்க டிடிவி வாசன் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments