Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை மனுவுடன் தங்க சங்கிலியை நிதியாக தந்த பெண்! – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (15:25 IST)
மேட்டூரில் வேலை கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக மேட்டூர் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி தண்ணீரை திறப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் வரும் வழியில் மேட்டூரை சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண் தனக்கு வேலை கேட்டு ஒரு மனுவும், கூடவே கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்க சங்கிலியையும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments