Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை மனுவுடன் தங்க சங்கிலியை நிதியாக தந்த பெண்! – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (15:25 IST)
மேட்டூரில் வேலை கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக மேட்டூர் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி தண்ணீரை திறப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் வரும் வழியில் மேட்டூரை சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண் தனக்கு வேலை கேட்டு ஒரு மனுவும், கூடவே கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்க சங்கிலியையும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments