Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தில்லு முல்லுகளை கவனியுங்கள்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (12:33 IST)
வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தில்லு முல்லுகள் இருக்கிறதா என கவனிக்கும் படி ஸ்டாலின் அறிவுறுத்தல். 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தற்போது தயாராகி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் இதில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 என்பதும் பெண் வாக்காளர்கள் 3,09,25,603 என்பதும் மூன்றாம் பாலினத்தவர் 6,385 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் என்றும் இந்த தொகுதியில் மொத்தம் 6,55,366 வாக்காளர்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி கீழ்வேலூர் என்றும் இந்த தொகுதியில் 1,73,107 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 
இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் தில்லு முல்லுகள் இருக்கிறதா என்பதை கவனமாக பாருங்கள் என திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments