Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்ற ஸ்டாலின்: என்ன முடிவா இருக்கும்??

தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்ற ஸ்டாலின்: என்ன முடிவா இருக்கும்??
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:19 IST)
அண்ணா பல்கலை.க்கு எதிராக தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் வெளியிட்டுள்ளார்.  
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். அதேபோல உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு, அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். #DismissSurappa என தமிழக அரசு  பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த கூகிள் பிக்ஸல்4ஏ! – மன்னிப்பு கேட்ட கூகிள்!