Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசு கொடுத்த இலவச அரிசியை வித்துட்டாங்க! – அமைச்சர் மீது ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய அரசு கொடுத்த இலவச அரிசியை வித்துட்டாங்க! – அமைச்சர் மீது ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
, ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (09:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் குற்றசாட்டை முன் வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் முன்கூட்டியே திமுக தமிழகம் முழுவதும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வரும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக மீது ஊழல் புகார்களை முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் பேசிய அவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்காக வழங்கிய இலவச அரிசியை அமைச்சர் காமராஜ் வெளிசந்தையில் விற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லையென்றும், தேர்தல் நெருங்கி வருவதால் அவர் விருப்பத்திற்கு குற்றசாட்டுகளை வைத்து வருவதாகவும் அதிமுகவினர் பேசிக் கொள்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கும் சீனா! – சுட்டுத்தள்ள இந்தியா திட்டம்?