Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயியாக இருக்க வேண்டிய அவசியமில்லை! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் பதில்!

Advertiesment
Tamilnadu
, புதன், 23 செப்டம்பர் 2020 (13:31 IST)
விவசாய மசோதா விவகாரத்தில் ‘ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக அரசு மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. தமிழக முதல்வரின் இந்த முடிவை விமர்சித்து பேசிய மு.க.ஸ்டாலின் “முதல்வர் தன்னை இனி விவசாயி என அழைத்துக் கொள்ள கூடாது” என பேசியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிராக கேள்வியெழுப்பிய முதல்வர் “மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?” என கேட்டுள்ளார். முதல்வரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மு.க.ஸ்டாலின் “மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில் அன்பும் அக்கறையும் இருந்தாலே போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிக விரைவில் சென்னையில் புறநகர் ரயில் சேவை!!