Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலில் இருந்து மக்களை காக்க ஒன்றிணைவோம்! - உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (13:43 IST)
தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்களுக்கு உதவும் பணிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் திமுகவினருக்கு அறிக்கை விடுத்துள்ள மு.க.ஸ்டாலின் “பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்! அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்! மக்களைப் பாதுகாப்பது நமது கடமை!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஆளுனர்களுக்கு 10 ஆண்டு சிறை: பாகிஸ்தானில் பரபரப்பு..!

Go Back Rahul.. உபியில் ராகுல் காந்திக்கு எதிராக திடீர் போராட்டம்..!

சென்னையின் பல பகுதிகளில் திடீர் மழை.. இன்று இரவு எங்கெல்லாம் மழை பெய்யும்?

’தலைவன் தலைவி’ போல் ஒரு உண்மை சம்பவம்: விவாகரத்து பெற்றும் ஒன்றாக வாழும் தம்பதிகள்!

இனி உலகமெங்கும் UPI பரிவர்த்தனை: 192 நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments