Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:20 IST)
திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பரபரப்பான இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது அவர் அதிமுக அரசு மீதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியலை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சட்டமன்ற தேர்தலை விரைவில் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளன. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்திக்க உள்ளார்
 
அதிமுக அரசில் நடந்த தவறுகள், ஊழல்கள், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் ஆகியவற்றை அவர் அளிப்பார் என்றும் இதனை அடுத்து அதிமுக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது 
 
அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் திடீரென திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசின் மீது ஊழல் பட்டியலை அளிக்க உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments