Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:49 IST)
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகள் 1 லட்சம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முன்னதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அண்ணா நூலகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் தருவதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் “விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் 4.3 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 4 மாதங்களுக்கு 1 லட்சம் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணத்துலயும் எவ்ளோ வேலை கெடக்கு! – வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்!