Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெய்பீம் பார்த்தபோது மிசா காலங்கள் நினைவு வந்தது! – மனம் திறந்த மு.க.ஸ்டாலின்

ஜெய்பீம் பார்த்தபோது மிசா காலங்கள் நினைவு வந்தது! – மனம் திறந்த மு.க.ஸ்டாலின்
, திங்கள், 1 நவம்பர் 2021 (15:35 IST)
நடிகர் சூர்யா நடித்து ப்ரைமில் வெளியாக உள்ள ஜெய்பீம் படத்தை பார்த்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்ததாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தில் இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் துயரங்களை துல்லியமாக காட்டியுள்ளதாகவும், அதில் பல காட்சிகள் மிசா காலத்தின் தான் சிறையில் இருந்தபோது நடந்தவற்றை நினைவுப்படுத்தியதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை