Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச்.ராஜா சாரணர் இயக்கத் தலைவரா?: மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் அரசு என ஸ்டாலின் விளாசல்!

எச்.ராஜா சாரணர் இயக்கத் தலைவரா?: மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் அரசு என ஸ்டாலின் விளாசல்!

எச்.ராஜா சாரணர் இயக்கத் தலைவரா?: மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் அரசு என ஸ்டாலின் விளாசல்!
, திங்கள், 11 செப்டம்பர் 2017 (13:10 IST)
தமிழகத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்து சாடியுள்ளார்.


 
 
பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவை சாரணர், சாரணியர் இயக்கத்தலைவராக அதிமுக அரசு நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் காவி கொள்கையை புகுத்தும் செயல் என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ஸ்டாலின் கூறும்போது அதிமுக அரசு எச்.ராஜாவை நியமிக்கும் செய்தி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உள்ளத்தில் நஞ்சை விதைக்க திரைமறைவில் முயற்சி நடக்கிறது என்று கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாஜக பதவியை பெறவே அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது அம்பலமாகியுள்ளது. ஊழல் அதிமுக அரசின் கொள்ளையில் நாங்களும் பங்குதாரர்கள் என்று பாஜக ஒப்புக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம்; நீக்கப்படுவாரா சசிகலா?