Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா? – சாத்தான்குளம் சம்பவத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (13:16 IST)
சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் காவலில் அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை திறந்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர்களுடன் ஜெயராஜுக்கு வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் காவலர்கள் அவரையும், அவரது மகனையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் உடல்நல குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார் என பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும்!” என  அறிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments