Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மண்புழு போல் ஊர்ந்து செல்பவன் அல்ல நான்! – எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்!

மண்புழு போல் ஊர்ந்து செல்பவன் அல்ல நான்! – எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்!
, ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (14:43 IST)
தான் மண்புழு போல ஊர்ந்து சென்று பதவிகளை பெறுவது இல்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானும், ஸ்டாலினும் ஒரே சமயத்தில் அரசியலுக்கு வந்ததாகவும், ஸ்டாலின் போல் குடும்ப அரசியலால் பதவிகள் பெறாமல், தான் கஷ்டப்பட்டு முதல்வர் பதவியை அடைந்ததாகவும் கூறியிருந்தார்.

எடப்பாடியாரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு.க.ஸ்டாலின் “மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வர் பதவியில் அமர எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு பதவியே தேவையில்லை. நான் 1989க்கு முன்பிருந்தே அரசியலில் இருக்கிறேன். அப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி எங்கிருந்தார். நான் மாணவனாக இருந்த போதே அரசியலில் இறங்கியவன்” என பேசியுள்ளார்.

முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை புரட்டி போடும் மழை! வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!