Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை விடுவதாக இல்லை; ஒண்டிக்கு ஒண்டி பார்த்துவிடுவோம்: முக ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (21:22 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக வேட்பாளருக்கும், திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இருவரும் பிரச்சார மேடைகளில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். முதல்வர் ஈபிஎஸ் முதல்வரானது விபத்து என்று முக ஸ்டாலினும், ஸ்டாலின் திமுக தலைவரானது விபத்து என்றும் மாறி மாறி ஆவேசமாக பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசியதற்கெல்லாம் நான் பதில் சொல்லிவிட்டேன் என்றும், இன்று நாங்குநேரியில் பேசியதற்கு நாளை அங்கு சென்று பதில் சொல்வேன் என்றும், அவரை விடுவதாக இல்லை என்றும் ஒண்டிக்கு ஒண்டி பார்த்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments