Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் உயிரை விடுறதா சொல்லவேயில்லை.. அது போலியானது! – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (13:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர் போலியானது என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள நிலையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் ஜெயிக்காவிட்டால் இறந்து விடுவதாக விஜயபாஸ்கர் சொன்னதுபோல அவர் கண்ணீருடன் உள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இதுகுறித்து அவரது முகப்புத்தக பக்கத்தில் விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் “விராலிமலை தொகுதி மக்களிடையே எனக்கு நல்மதிப்பும், மரியாதையும் உள்ளது. மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். என்னைப்பற்றி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள போஸ்டர் போலியானது. நான் உயிரை விடுவதாக எப்போதும் சொல்லவில்லை. என்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக், ட்விட்டரில் வெளியாகும் பதிவுகள் மட்டுமே என்னுடைய பொறுப்பு” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments