Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள் மேல் கை வைத்தால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (09:54 IST)
தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நோயாளிகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேர்ந்தால் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments