Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிப் பாடங்கள் மீண்டும் குறைக்கப்படுகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:12 IST)
பள்ளி பாடத்திட்டங்களில் மீண்டும் சில பாடங்கள் குறைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதலாக மீண்டும் பள்ளிகள் மெல்ல திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் குறுகிய காலத்தில் படிப்பதின் சிரமம் கருதி பாடத்திட்டங்களில் குறிப்பிட்ட பாடங்கள் சில குறைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் பாடத்திட்டம் மீண்டும் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் எனவும் பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட்டால்தான் மதுபானம்; மதுப்பிரியர்களுக்கு கேட் போட்ட அமைச்சர்!