Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தும்பை விட்டுட்டு வாலை பிடிச்சா? கடுப்பான விஜயபாஸ்கர்!

தும்பை விட்டுட்டு வாலை பிடிச்சா? கடுப்பான விஜயபாஸ்கர்!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (08:54 IST)
நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கும், காங்கிரசுக்கும் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டமாக பேசியுள்ளார். 
 
நீட் தேர்வு குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில் சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நீட் தேர்வு பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. 
 
நீட் என்ற வார்த்தை கடந்த 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தான் விதைக்கப்பட்டது. இப்போது அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படியே செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
 
ஆனால் மக்களையும், மாணவர்களையும் குழப்பி திசை திருப்புவதற்காக, திமுகவும், எதிர்க்கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கின்ற செயலை செய்கின்றனர் என காட்டமாக பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா விடுதலை எப்போது? பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல்