Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் பதில்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (15:46 IST)
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயக்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் சென்னையில் அதிகளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுதான். தமிழகம் முழுவதும் 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமாரிடம் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுமா என்று கேட்கப்பட்டது. இது சம்மந்தமாக அவர் அளித்த பதிலில் ‘கிட்டத்தட்ட 78 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் ஐந்தாவது முறையாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதனால் மீண்டும் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments