Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (16:32 IST)
அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
 
அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது, “முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, அவர் துவக்கி வைத்த பேருந்துகளில் அதாவது 2012ஆம் ஆண்டிலேயே 'அரசு போக்குவரத்துக் கழகம்' என்றுதான் இருந்தது. அப்போதே 'தமிழ்நாடு' என்ற பெயர் எடுக்கப்பட்டது.
 
காரணம், 'அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி', 'அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர்', 'அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்' என்று இருந்தால், படிப்பதற்கு நீளமாக இருக்கிறது என்பதால்தான் 'தமிழ்நாடு' என்ற பெயர் அப்போது எடுக்கப்பட்டது. இது நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏதோ இப்போதுதான் புதிதாக தோன்றிய பிரச்சனை போல எழுப்பி இருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
 
மேலும், “பேருந்துகள் எல்லாம் பழையதாக இருக்கின்றன என்று சிலர் கூறிய நிலையில், தமிழ்நாடு முதல்வர் தற்போது புதிய பேருந்துகளையும் இறக்கியுள்ளார். மேலும், புதிய  வழித்தடங்களும் தமிழ்நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனவே, அரசு போக்குவரத்துக் கழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால், பழைய பிரச்சனையை மீண்டும் கிளப்புகிறார்கள்,” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments