Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

Siva
புதன், 9 ஏப்ரல் 2025 (14:11 IST)
தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் கார்த்திகேயன் சண்முகம் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு ஆண்டுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் அமைச்சராகியுள்ளார். ஆனால், அவரது சகோதரர் அசோக் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகியுள்ளார்.
 
இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் தற்போது திடீரென ஆஜராகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments