Publish Date: Thu, 04 Jan 2024 (07:28 IST)
Updated Date: Thu, 04 Jan 2024 (07:29 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவருக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்படுமா என்பது குறித்து தகவல் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அது முதல் அவர் ஆறு மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இதுவரை காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட உள்ள அவர், இன்று நேரில் ஆஜராக வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
ஏனெனில் செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்று அவரிடம் நேரில் ஒப்படைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்படுமா அல்லது வேறு ஏதேனும் உத்தரவு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.