Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவால் மாமியார், மருமகள் சண்டை நின்றுள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (10:49 IST)
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ பல வீடுகளில் பல்வேறு சண்டைகளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நலத்திட்டங்களால் நின்றுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் அதிமுக சார்பில் தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக அமைச்சர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பிறகு பேசிய அவர் ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கா பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கினார். அதிமுக அரசு பெண்களின் நலனுக்கு என்றும் முன்னுரிமை அளிக்கும். ஜெயலலிதா வழங்கிய இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றால் தமிழகத்தில் மாமியார், மருமகள் சண்டை நின்றுள்ளது” என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments