Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 26ல் ராஜ்யசபா தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:55 IST)
மார்ச் 26ல் ராஜ்யசபா தேர்தல்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 55 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அதற்கான தேர்தல் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்திலும் 6 ராஜ்யசபா எம்பி தேர்தலும் அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ஆம் தேதி என்றும் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி தேவைப்பட்டால் தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் ஆறு எம்பிகள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments