Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு! – அமைச்சர் சேகர் பாபு தகவல்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:59 IST)
சென்னையில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை கீழ்பாக்கத்தில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இந்த நிலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஆன்மிகம் என்ற பெயரில் ஊடுருவ நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments