Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம் –பள்ளிகள் இயங்குமா?

ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம் –பள்ளிகள் இயங்குமா?
, புதன், 3 அக்டோபர் 2018 (15:35 IST)
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாளை ஈடுபடுகிறது ஜாக்டோ-ஜியோ அமைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழநாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது ஜாக்டோ- ஜியோ அமைப்பு.

இதில் பல லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பப்க்கேற்றுக் கொள்வார்கள் என அதன் ஒருங்கிணைப்பாளர் தாஸ் முன்பே அறிவித்திருந்தார். இதனால் நாளை நடைபெறப்போகும் வேலைநிறுத்தால் பள்ளிகள் இயங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை பள்ளிகள் இயங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பள்ளி மாணவர்கள் சீருடை மாற்றம் சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"சொந்தமாக கார் கூட இல்லை" - யார் இந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்?