திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா என்ற கேள்விக்கு, "தலைமைதான் முடிவு எடுக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி மோதுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்த பிறகு கூடுதல் வலிமை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த கூட்டணிகளில் தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இணைய தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
அது மட்டும் இன்றி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் கே. என். நேரு அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, "திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. இது குறித்து திமுக தலைமைதான் முடிவு எடுக்கும்," என்றும் தெரிவித்தார்.