Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய் விலை உயர்வு குறித்து பேச அண்ணாமலைக்கு உரிமை இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:15 IST)
ஆவின் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இதற்கு அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 
 
இந்த நிலையில் நெய் விலை உயர்வு குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்  
மேலும் தனியார் நிறுவனங்களின் நெய் விலையை விட ஆவின் நெய் விலை குறைவாக இருப்பதாகவும் வெளிச்சந்தையில் தனியார் லிட்டருக்கு 960 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் ஆவின் விற்பனையை அதிகரிக்க, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஆவின் பாலகம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments