தடுப்பூசி ஸ்டாக் இல்லை; டெல்லி போய்தான் கேக்கணும்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (09:54 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளதால் டெல்லி சென்று கோரிக்கை வைக்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்கள்தோறும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாது பொது இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய நாளை மறுநாள் டெல்லிக்கு சென்று கோரிக்கை வைக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments