Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை!

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை!
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:13 IST)
யூடியூப் பார்த்து  வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி. 

 
அரக்கோணம் அருகே நெடும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு யூடியுப் பார்த்து கணவரும் அவருடைய உறவினர்களும் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
 
இதில் குழந்தை பரிதாபமாக பலியானது என்பதும் லோகநாதனின் மனைவி அதிக ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்ட நிலையில் லோகநாதன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 
இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், யூடியூப் பார்த்து  வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்தது தங்கம் விலை!