Publish Date: Mon, 20 Dec 2021 (11:48 IST)
Updated Date: Mon, 20 Dec 2021 (11:49 IST)
யூடியூப் பார்த்து அரக்கோணம் பெண் ஒருவருக்கு அவருடைய உறவினர்கள் பிரசவம் பார்த்த சம்பவத்தில் குழந்தை பலியானது என்பதும் தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில் இது குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி அவர்கள் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள
யூடியூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷம பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்பட்டு வருகிறது. அவற்றை மக்கள் நம்பக்கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்