Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (13:52 IST)
தமிழகத்தில் தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை எழும்பூரில் இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய்  பரவி வருகிறது 
 
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மெட்ராஸ் ஐ வந்தவர்கள் தாமாகவே மருந்து கடைகளில் சென்று மருந்து வாங்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
தமிழகத்தில் தினசரி 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டாலும் டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு மெட்ராஸ் ஐ இருக்காது என்றும்  இந்நோய் பரவுவதை தடுக்க பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments