Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எதுவும் செய்ய முடியவில்லை: கேன்.என்.நேரு

Webdunia
புதன், 31 மே 2023 (07:21 IST)
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் திமுக தொண்டர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேஎன் நேரு 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது எதையும் எதிர்பார்க்காமல் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். முக ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்பு என்பது மிகவும் அபாரமானது. 
 
தொண்டர்களின் உழைப்பு காரணமாக தற்போது ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. 
 
எங்களுக்கு எந்த விதமான சொந்த ஆசையும் இல்லை தொண்டர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை ஆசை, ஆனால் அந்த ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments