Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவில் திடீர் மாற்றம்.. மல்யுத்த வீராங்கனைகள் நாடகமா?

Webdunia
புதன், 31 மே 2023 (07:16 IST)
பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக நேற்று மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர். வீட்டில் இருந்த பதக்கங்களை எடுத்து வைக்கும் வீடியோவையும் வீராங்கனைகள் வெளியிட்டனர். 
 
இந்த வீடியோவுக்கு உருக்கமான பல கருத்துக்கள் கூறப்பட்ட நிலையில் திடீரென வீராங்கனைகள் தாங்கள் கங்கையில் பதக்கங்களை தூக்கி எறியும் முடிவை கைவிடுவதாகவும் பாலியல் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து நாட்கள் கெடு இருப்பதாகவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 பாலியல் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கங்கையில் பதக்கங்களை வீசப் போவதாக அறிவித்த வீராங்கனைகள் திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
 
வீராங்கனைகளின் நாடகமா அல்லது மத்திய அரசுக்கு கொடுக்கும் எச்சரிக்கையா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த போராட்டத்திற்கு பின்னர் அரசியல் கட்சிகள் இருப்பதாக கூறப்படுவது ஒருவேளை உண்மை தானோ என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு தற்போது ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரம்ஜான் வாழ்த்து..!

அணு ஆயுத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் வெடிகுண்டு தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்