Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எதுவும் செய்ய முடியவில்லை: கேன்.என்.நேரு

KN Nehru
, புதன், 31 மே 2023 (07:21 IST)
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் திமுக தொண்டர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேஎன் நேரு 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது எதையும் எதிர்பார்க்காமல் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். முக ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்பு என்பது மிகவும் அபாரமானது. 
 
தொண்டர்களின் உழைப்பு காரணமாக தற்போது ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. 
 
எங்களுக்கு எந்த விதமான சொந்த ஆசையும் இல்லை தொண்டர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை ஆசை, ஆனால் அந்த ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவில் திடீர் மாற்றம்.. மல்யுத்த வீராங்கனைகள் நாடகமா?