’பாத்துட்டா.. போய்ட்டே இரு’; தொண்டர்களை விரட்டிய திமுக அமைச்சர்! – மீண்டும் சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (12:21 IST)
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை காண வந்த தொண்டர்களை அமைச்சர் கே.என்.நேரு விரட்டி தள்ளிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வீரவணக்க நாள் அன்று திருவள்ளூரில் சேர் எடுத்து வராததால் தொண்டர் ஒருவர் மீது அமைச்சர் ஆவடி நாசர் கல்லை வீசியெறிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினரும், சமூக வலைதளங்களில் பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமைச்சர் கே.என்.நேருவின் செயல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தலைவாசலில் அமைச்சர் உதயநிதியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தொண்டர்கள் பலர் உதயநிதிக்கு பூங்கொத்து, சால்வை உள்ளிட்டவற்றை அணிவித்து மரியாதை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு அருகில் நின்றபடி ஒவ்வொரு தொண்டரையும் கையை பிடித்து இழுத்து தள்ளியதோடு, சிலரை தலையில் அடிக்கவும் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments